Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை - தமிழகத்தில் 20.28 லட்சம் பேர் குணமடைந்தனர் : புதிதாக 18,023 பேருக்கு தொற்று; 409 பேர் உயிரிழப்பு

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்றில் இருந்து இதுவரை 20.28 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக18,023 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 9,992, பெண்கள் 8,031 என மொத்தம் 18,023 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 2,439, ஈரோட்டில் 1,596, சென்னையில் 1,437, திருப்பூரில் 995 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்து 74,704 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 4 லட்சத்து 95,305 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 20 லட்சத்து 28,344 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 3,843 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 31,045 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் 26,751, திருப்பூரில் 18,969, சென்னையில் 16,709 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 18,595 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 409 பேர் நேற்று உயிரிழந்தனர். கோவையில் 44 பேர், சென்னையில் 42 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27,765 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 7,560 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5 லட்சத்து 19,574, கோவையில் 1 லட்சத்து 93,037, செங்கல்பட்டில் 1 லட்சத்து 47,996, திருவள்ளூரில் 1 லட்சத்து 5,744 என்றஎண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

தமிழகத்தில் 271 அரசு, தனியார்ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 90 லட்சத்து 62,609பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 70,112 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x