Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM
கோவை பெரியநாயக்கன்பாளை யம் வனச்சரகத்துக்குட்பட்ட கோபனாரி மேற்கு பகுதியில்வனத்துறையினர், காவல்துறை யின் எஸ்டிஎஃப் பிரிவினர் இணைந்து கடந்த 6-ம் தேதிரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த னர். அப்போது, குண்டுக்கல் சரக வனப்பகுதியின் ஓடைக்குள் இரண்டு பேர் இருப்பதைக் கண்டு அவர்களை பிடித்து விசாரித்தனர்.
இருவரும் கேரள மாநிலம், அட்டப்பாடி அருகே உள்ள கோட்டத்துறையைச் சேர்ந்த ரங்ககாமி (68), மணிகண்டன் (19) என்பதும், காட்டுப்பன்றி கறியை ஓடையில் சுத்தப்படுத்திக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
ஓடையின் மேட்டுப் பகுதியில், கறியை வெட்டிக் கொண்டிருந்த 4 பேர் கறி, வெட்டுக்கத்தியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்து சுமார் 30 கிலோ இறைச்சி கைப்பற்றப் பட்டது.
இதையடுத்து, பெரியநாயக் கன்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வனவர் மதுசூதனன் மற்றும் குழுவினர் தப்பியோடியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், கோவை பன்னிமடையைச் சேர்ந்தசெந்தில்குமார் (36), கோட்டத் துறையைச் சேர்ந்த செல்வம் (38),சக்திவேல் (21), வேலுச்சாமி (44)ஆகிய நால்வரும் நேற்றுமுன் தினம் கேரள பகுதியில் தனித் தனியே பிடிபட்டனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இரும்பு கம்பிகளில் சுருக்கு வைத்து, காட்டுப்பன்றியை வேட்டையாடி வெட்டிக் கூறுபோட்டதும், தங்களது தேவை போக மீதியை விற்பனை செய்யதிட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இவர்கள் மீது வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், கோவை, மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி 6 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT