Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல்? - தனியார் மருத்துவமனைகள் மீதான விசாரணை குழு அறிக்கை சமர்ப்பிப்பு :

கோவை

கோவையில் கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக புகாருக்குள்ளான 2 தனியார் மருத்துவமனைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

கோவை சரவணம்பட்டி, துடியலூர், சுந்தராபுரம், சுங்கம் ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் 4 தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் 4 தனியார் மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்த வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சரவணம்பட்டி மற்றும் துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் விசாரணை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். புதிதாக கரோனா நோயாளிகளை அனுமதிக்க இரு மருத்துவமனைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சுந்தராபுரம் மற்றும் சுங்கம் பகுதியில் செயல் படும் 2 தனியார் மருத்துவமனைகள் குறித்தும் குழுவினர் விசாரணை செய்து ஆட்சியரிடம் அறிக்கை அளித்துள்ளனர். விரைவில் அந்த அறிக்கைகள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x