Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவரின் 145-வது நினைவு தினம் அனுசரிப்பு :

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அமைய முக்கியக் காரணமாக விளங்கிய வில்லியம் கிரெகம் மெக்ஐவரின் 145-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, உதகை ஸ்டீபன் தேவாலய கல்லறைத் தோட்டத்தில் உள்ள மெக்ஐவரின் கல்லறையில் மலர்வளையம் வைத்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அஞ்சலி செலுத்தினார். தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கெட்சிலீமா அமாலினி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன், ஸ்டீபன் சர்ச் பாதிரியார் அருண்திலகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x