Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

காவலர் தாக்கப்பட்டதில் மேலும் ஒருவர் கைது :

அவிநாசி அருகே தெக்கலூரில் சட்ட விரோதமாக மது விற்பனைசெய்தவர்களை பிடிக்க சென்ற போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தப்பியோடியவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசிஅருகே தெக்கலூர் செங்காளிபாளையம் தோட்டப்பகுதிக்குள் மது பாட்டில் விற்பனை செய்பவர்களை பிடிக்க, கடந்த 6-ம் தேதி மதுவிலக்கு போலீஸார் சென்றனர். அப்போது மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 5 பேர், காவலர் திருவேங்கடத்தை தாக்கினர். இதுதொடர்பாக அவிநாசி போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். தப்பியோடிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் (22) என்பவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், தெக்கலூர் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் உள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அவரை பிடித்து விசாரித்ததில், போலீஸாரை தாக்கி தப்பியோடிய லோகேஸ்வரன் என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x