Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM
சேலம்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 313 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 881 கனஅடியாக அதிகரித்தது.
தமிழக மற்றும் கர்நாடக மாநில காவிரி ஆற்று வனப்பகுதியில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 313 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 881 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு விநாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 96.78 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 96.77 அடியானது. நீர் இருப்பு 60.73 டிஎம்சி-யாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT