Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய அழைப்பு :

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 2020-2021-ம் ஆண்டு கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2020-21-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை காப்பீடு செய்ய 4,900 குறியீடு நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம். வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீத மானியத்திலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கு 70 சதவீத மானியத்திலும் காப்பீடு செய்யப்படும்.

இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 5 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் இரண்டரை வயது முதல் 8 வயது உடைய பசு மற்றும் எருமைகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x