Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

`கல்பனா சாவ்லா' விருதுக்கு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு :

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: துணிவு மற்றும் சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வோர் ஆண்டும், தமிழக முதல்வரால் சுதந்திர தினவிழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் பதக்கம் கொண்டது. தமிழகத்தைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீரசாகச செயல்புரிந்த ஒரு பெண் இவ்விருதைப் பெறுவார். இயற்கைப் பேரழிவுகள், விபத்துகள், நீரில் மூழ்கும் சம்பவங்கள், தீ தொடர்பான சம்பவங்கள், திருட்டு மற்றும் துணிச்சலான முயற்சிகளின்போது தனி நபர்கள் நிகழ்த்திய வீரசாகச சம்பவங்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

2021-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது பெற தகுதியுடையவர்கள், விரிவான தன் விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் தகுந்த ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியர் மூலம் அல்லது ‘https://awards.tn.gov.in/’ என்ற இணைதயளம் மூலம், `அரசு செயலர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009` என்ற முகவரிக்கு வரும் 30-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். விருது பெறத் தகுதியானவர்கள், இதற்காக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x