Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

தியாகதுருகம் அருகே சாராயம் விற்றதாக 3 பேர் கைது :

கள்ளக்குறிச்சி: தியாகதுருகத்தில் வாடகை வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்ததாக விஜயா (31), முத்து (31) ஆகியோரை கைது போலீஸார் கைது செய்தனர்.18 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தியாகதுருகம் போலீஸார் நேற்று மாடூர் சுங்கச்சாவடி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே பைக்கில் வந்த நபரை மறித்து சோதனையிட்டனர். அப்போது அவரிடம் 16 லிட்டர் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் தகரை கிராமத்தைச் சேர்ந்த விஜய் (23) என்பதும், கல்வராயன்மலையில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸார் விஜயை கைது செய்தனர். சின்னசேலம் அருகேயுள்ள தகரை கிராமத்தில் சின்னையன் என்பவரின் கரும்பு வயலுக்குச் சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லிட்டம் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக தகரை பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x