Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM
புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று தெரிவித்ததாவது:
100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக புதுச்சேரியை மாற்ற வேண்டும் என்ற இலக்கை நோக்கி சுகாதாரத்துறை துரிதமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து கிராமங்களிலும் கரோனா சிறப்பு தடுப்பூசி மையம் அமைத்து, பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் அவர்கள் கிராமத்திலேயே அதிக சிரமமின்றி எளிய வகையில் தடுப்பு ஊசி போட்டு கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் தங்களின் மாற்றுத்திறனாளி அடையாள அட்டையையைக் கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் கிராமத்தின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT