Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM
விழுப்புரம்: நெய்வேலியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியின் மூலமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைத்துத் தருமாறு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அங்கு ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு என்எல்சி தலைவர் ராகேஷ் குமார் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனிடையே விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பயன்படுமாறு 25 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குமாறு கடந்த மே 21-ம் தேதி விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படையில் நேற்று என்எல்சி நிர்வாக அலுவலர்கள் அசோக்குமார், மனோகரன் ஆகியோர் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ரவிக்குமார் எம்பியிடம் வழங்கினர். இதனை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் சண்முககனியிடம் ரவிக்குமார் எம் பி வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT