Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

டோக் பெருமாட்டி கல்லூரியில் - குடும்பங்களுக்கு இடையே இணையவழி கூடுகை நிகழ்ச்சி :

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் குடும்பங்கள் இடையேயான இணையவழி கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி நடைபெற்ற இணையவழி கூடுகை விளையாட்டு போட்டியை கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் தொடங்கி வைத்தார். இதில் கல்லூரியில் பணிபுரியும் அலுவலர்கள் பலரது குழந்தை களும் பாட்டு, நடனம், இசை, ஓவியம், தற்காப்புக் கலை என பல்வேறு திறமைகளை வெளிப் படுத்தினர்.

சர்வதேச அளவில் 2021 சமா தானம், நம்பிக்கையின் ஆண்டாக இருப்பதால் பணியிடத்தில் ஆரோக்கியமான உறவுகளை மேம்படுத்தும் அவசியத்தை வலியு றுத்தும் வகையில், மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் 2021 என்ற கல்லூரி குடும்பங்களுக்கு இடையேயான இணையவழி கூடுகை விளையாட்டுப் போட் டியை முதல்வர் கிறிஸ்டியானாசிங் தொடங்கி வைத்தார்.

இக்கல்லூரியில் பணிபுரியும் பலரது குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று ஓவியம், கட்டுரை, இசைக்கருவி வாசித்தல், தற்காப்புக் கலை என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமைகளில் கல்லூரி வளாகத்தில் இந்த கூடுகை நிகழ்வு நடக்கிறது எனக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x