Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM
மாவட்ட, கீழமை நீதிமன்றங் களில் எந்த விதிமுறை, வழி காட்டுதல்கள் அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப் படுகிறார்கள்? என்பதை தமிழக அரசு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.கண்ணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: மாவட்ட, கீழமை நீதிமன்றங்களுக்கு விரைவில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக் கப்பட உள்ளனர்.
2017-ம் ஆண்டு விதிகளின் அடிப்படையிலும், உச்சநீதி மன்றம், உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல் படியும் சட்ட வல்லுநர் குழு அமைத்தும் மாவட்ட, கீழமை நீதிமன்றங் களுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும் அரசு வழக்கறிஞர்கள் விவரங்களை இணையத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட் டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகை யில், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் ஒட்டப்படும். 1961 அரசாணையைப் பின்பற்றி அரசு வழக்கறிஞர் நியமனம் நடை பெறும் என்றார்.
பின்னர் நீதிபதிகள், மாவட்ட, கீழமை நீதிமன்றங்களில் எந்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு தல்படி அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள்? என அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT