Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது :

தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை தலைவர் பிரேந்திரகுமார் உத்தரவின்பேரில், மதுரை கோட்ட பாதுகாப்புப் படை ஆணையர் அன்பரசு தலைமை யில் எஸ்ஐக்கள் மலையாண்டி, பாலச்சந்திரன் மற்றும் போலீஸார் அடங்கிய குழுவினர் மதுரை ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந் தனர்.

அப்போது மைசூரிலிருந்து மதுரை வந்த ரயிலை அவர்கள் சோதனையிட்டனர்.

இதில் ஒரு பெட்டியில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சரவணன்(25), முனியசாமி (35), மற்றொரு சரவணன்(40) ஆகியோரைக் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x