Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM
ராமநாதபுரத்தில்
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மேலச்சித்தூர்வாடி கிராமத்தைச் சேர்ந்த பாலு மனைவி மார்க்கரேட் மேரி (45). இவர் நேற்று பகலில் வயலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் மார்க்கரேட்மேரி சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார்.மார்க்கரேட் மேரியின் கணவர் பாலு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு பவுலின்ரோஷி(24), பிரின் ஸியா(22) என்ற இரு மகள்கள் உள்ளனர். இதுகுறித்து திருப்பாலைக் குடி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT