Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

மின்வாரிய தொழிலாளர் மின்சாரம் தாக்கி மரணம் :

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக் கோட்டை அண்ணாநகர் காலனியைச்சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(27). மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலா ளராகப் பணியாற்றினார்.

இவர் கடந்த மே 15-ம் தேதி கும்பக்கரை சாலையில் பணி செய்தபோது மின்சாரம் தாக்கி பலத்த காயத்துடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அங்கு மீண் டும் அவருக்கு உடல்நலம் பாதித்து பெரியகுளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பெரியகுளம் எஸ்ஐ ராமசாமி விசாரித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x