Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

நோய் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடைகளை திறக்க வேண்டாம்: வணிகர் சங்கம் அறிவுறுத்தல் :

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நோய் கட்டுப்பாட்டுப் பகுதியில் வணிகர்கள் கடையை திறக்கக் கூடாது, என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கரோனா தொற்றினை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அறிவுறுத்தல்படி மளிகை, காய்கறி, பழம், பூ, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கடைகளை திறக்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறி, பழம், பூ, இறைச்சிக் கடைகள் தவிர வேறு எந்த வணிக நிறுவனங்களும் திறக்க அனுமதி இல்லை. தளர்வுகள் பெற்றுள்ள வணிக நிறுவனங்கள் அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்துவதில் வணிகர்கள் பெரிதும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x