Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM
ஈரோடு: ஈரோட்டில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 7 விசைத்தறிகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
கரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் மாநில அளவில் ஈரோடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கினை அமல்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஈரோட்டில் பெரியசேமூர், மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து நேற்று மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறையினர் பெரியசேமூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 7 விசைத்தறி கூடங்கள் அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு வந்ததோடு, தொழிலாளர்கள் முகக்கவசம் இன்றி பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 7 விசைத்தறி கூடங்களுக்கும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்ததோடு, அபராதமும் விதித்தனர்.
அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் விசைத்தறிகள் மற்றும் தொழிற்சாலைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT