Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

ஆவின் பால் கார்டு புதுப்பிக்க ஏற்பாடு :

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆவின் பால் கார்டு பெறுவதற்கு நாகர்கோவில் தலைமை அலுவலகம் வந்து கார்டுகளை புதுப்பிக்க முடியாத நிலை உள்ளது.

எனவே, வரும் 14-ம் தேதி வரை நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம், வடசேரி உழவர் சந்தை மற்றும் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் பாலகங்களில் வாடிக்கையாளர்கள் நடப்பு அட்டையை வழங்கி, புதுப்பித்துக் கொள்ளலாம். முகவர்கள் தங்களது பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து பால்கார்டுகளை வாங்கி, ஒன்றியத்தில் புதுப்பித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x