Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM
திருச்சி: சீர்மரபினர் நலச்சங்க ஆலோசகர் டாக்டர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
நாட்டில் பல சாதிகள் வாழ்ந்து வரும் நிலையில், ஒரு சாதிக்கு மட்டும் தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கை சமூக நல்லிணக்கத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தைத் தரக்கூடியது.
எனவே, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, அவர்களின் கல்வி, சமூகநிலை குறித்த புள்ளி விவரங்களை சேகரித்து, அனைத்து சாதி மக்களுக்கும் முறையான பங்களிப்பு, வாய்ப்பு, பிரதிநிதித்துவம் கிடைப்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT