Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

கழைக் கூத்தாடி குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவி வழங்கல் :

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ராமலிங்க நகரில் கழைக் கூத்தாடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கரோனா ஊரடங்கால் திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாததால், வாழ்வாதாரம் இழந்து உணவுக்கு வழியின்றி தவித்து வந்தனர். இதையறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் 50 கழைக் கூத்தாடி குடும்பத்தினருக்கு ஒருமாதத்துக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை நேற்று முன்தினம் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x