Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM

செய்யாறில் விதிமீறிய துணிக்கடைக்கு ‘சீல்' :

திருவண்ணாமலை: செய்யாறு நகரில் திறக்கப்பட்டிருந்த துணிக்கடை உட்பட 5-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு வருவாய்த் துறையினர் நேற்று ‘சீல்' வைத்தனர்.

தி.மலை மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 2-வது நாளாக நேற்று அமலில் இருந்தது. மளிகைக்கடை, காய்கறி கடை உட்பட அத்தியா வசிய கடைகள், விவசாயம் மற்றும் கட்டுமானம் தொடர்பான கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டது. அதேநேரத்தில் துணிக்கடை, சலூன் கடை, டாஸ்மாக் மதுக்கடை உள்ளிட்ட சில கடைகளை திறக்க அனுமதிக்கப் படவில்லை. இந்நிலையில் செய்யாறு நகரில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அனுமதிக்கப்படாத கடைகள் திறக்கப்பட்டிருப்பதை கண்டனர். இதையடுத்து, துணிக்கடை உட்பட 5-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு காவல் துறை பாதுகாப்புடன் வட்டாட்சியர் திருமலை தலைமையிலான குழுவினர் ‘சீல்' வைத்தனர். மேலும் அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x