Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM

வருடாந்திர கடன் திட்ட அறிக்கை வெளியீடு :

திருப்பத்தூரில் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட ஆட்சியர் சிவன் அருள்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்தியன் வங்கி மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகம் சார்பில் மாவட்ட வருடாந்திர கடன் திட்ட அறிக்கை (2021-22) வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வங்கி யாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் அதிகமாக கடன் வழங்க முன்வர வேண்டும். விவசாயக் கடனாக ரூ.2,663.89 கோடி, சிறு,குறு தொழில் கடனாக ரூ.500.72 கோடி இதர முன்னுரிமை கடனாக ரூ.1,050.30 கோடி என மொத்தம் ரூ.4,214.91 கோடி இலக்காக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எனவே, நிர்ணயம் செய்யப் பட்டுள்ள ரூ.4,214-91 கோடிகளை குறித்த காலத் துக்குள் வங்கியாளர்கள் வழங்கிட வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அருண், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளர் சுமலதா, பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் மாமல்லன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x