Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு கிராமத்தில் அரசினர் சமுதாய சுகாதார மருத்துவமனை உள்ளது. இந்த சுகாதார மையத்தை சுற்றிலும் புதர்மண்டி கிடக்கிறது. இதனால், இங்கு கடந்த சில நாட்களாக பாம்புகள் நடமாட்டம் இருப்பதாக நோயாளிகள் கூறி வந்தனர்.
இந்நிலையில், நரியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் நல்லபாம்பு ஒன்று நேற்று முன்தினம் நுழைந்தது. இதைக்கண்ட நோயாளிகள் அலறியடித்தபடி அங்கிருந்து வெளியேறினர். பிறகு, மருத்துவமனை ஊழியர்களிடம் பாம்பு நுழைந்தது குறித்து கூறினர். மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக ஆம்பூர் வனச்சரகர் மூர்த்திக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அங்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரத்துக்கு பிறகு பாம்பை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட பாம்பை அருகிலுள்ள மாச்சம்பட்டு காப்புக்காட்டில் விட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT