Last Updated : 08 Jun, 2021 03:12 AM

 

Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM

மே 28: ஐ

மே 28: ஐ.நா. பொதுச் செயலாளராக அன்டோனியா குட்டெரஸை மீண்டும் தேர்வுசெய்ய இந்தியா ஆதரவளித்துள்ளது. இவருடைய பதவிக்காலம் டிசம்பர் 31-ஆம் தேதி நிறைவடைகிறது.

மே 29: கரோனா இரண்டாம் அலையில் 577 குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாகி உள்ளதாக மத்திய மகளிர் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மே 29: கரோனா பாதிப்பால் உயிரிழந்த பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்படும், அந்தக் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான செலவை அரசே ஏற்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.

மே 31: துபாயில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய மகளிர் அணி ஒரு தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

ஜூன் 1: சமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது உள்ளிட்ட சேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்தன.

ஜூன் 1: டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தப் பிரிவில் பணியாற்ற இந்திய நடுவர் அசோக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜூன் 2: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்புத் தொகை, இலவச கல்வி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

ஜூன் 2: இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் வேற்றுருவத்துக்கு ‘கப்பா’ என்றும் இரண்டாவதாகக் கண்டறியப்பட்ட வைரஸ் வேற்றுருவத்துக்கு ‘டெல்டா’ என்றும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x