Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM
செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த சுந்தரவதனம், சென்னை மாதவரம் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் எஸ்பியாக இருந்த மருத்துவர் பி.விஜயகுமார் செங்கல்பட்டு எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராக பி.விஜயகுமார் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக மாவட்ட காவல் துறை சார்பில்அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மருத்துவரான இவர், 2009-ம்ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்வு எழுதி, ஐபிஎஸ் ஆக தேர்வுபெற்றார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தஞ்சை, கிருஷ்ணகிரியில் கூடுதல் எஸ்பியாக பணியாற்றினார். வேலூர் மாவட்ட எஸ்பியாகவும் சென்னைரயில்வே பிரிவிலும் பணியாற்றியுள்ளார். பின்னர், திருப்பத்தூர் எஸ்பியாக பணியாற்றினார். செங்கல்பட்டு மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்ட பின் 3-வது காவல் கண்காணிப்பாராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ரவுடிகள் மீது நடவடிக்கை
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, “காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் அனைத்து ரவுடிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பதுடன், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT