Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

பூதங்குடி இணைப்பு சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை :

சேத்தியாத்தோப்பு அருகே குண்டும், குழியுமாக உள்ள பூதங்குடி இணைப்பு சாலை.

கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி இணைப்பு சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பு அருகே பாழ்வாய்க்கால் பகுதியிலிருந்து கும்பகோணம் சாலையை இணைக்கும் பூதங்குடி ஊராட்சி இணைப்பு சாலை உள்ளது. இது முக்கிய சாலையாக இருந்து வரும் நிலையில் இந்த சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சீரமைக்கப்பட்டது. ஆனால் தற்போது சாலை குண்டும், குழியுமாக மாறி கற்கள் பெயர்ந்துள்ளது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட இந்த சாலைப் பணியை தரமாக செய்யாததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள். போக்குவரத்து அதிகம் உள்ள இந்த இணைப்பு சாலையை உடனடியாக தரமாக அமைத்துத் தர வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x