Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - கரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழப்பு :

கடலூர் மாவட்டத்தில் நேற்று 496 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 52,558 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 585 பேர் உட்பட 47,017 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,329 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 389 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 38,035 பேருக்கு தொற்று ஏற்பட் டுள்ளது.நேற்று 576 பேர் உட்பட இதுவரை 33,006 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 293 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 23,285 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 4 பேர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x