Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM
கோவில்பட்டி: மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபானம் கடத்திய 3 பேரை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.
மைசூரில் இருந்து தூத்துக்குடி வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்நாடக மாநில மதுபானங்கள் கடத்தி வரப்படுவதாக கோவில்பட்டி ரயில் நிலைய ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் வந்தவுடன், அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். சந்தேகப்படும்படியாக இருந்த இருவரை பிடித்து, அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது, அதில் கர்நாடகா மாநில மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி பாரதி நகர் முதல் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் மாரிசெல்வம் (26), வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன்(20), கடலையூரைச் சேர்ந்த பேச்சிமுத்து (32) என்பது தெரியவந்தது. அவர்களை கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 3 பேரையும் போலீஸார் கைது செய்து, 37 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT