Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

புதுக்கோட்டை, பெரம்பலூரில் : கருப்பு பூஞ்சைக்கு 2 பேர் உயிரிழப்பு :

புதுக்கோட்டை/ பெரம்பலூர்: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி பாப்பான்விடுதியைச் சேர்ந்தவர் சின்னான்குட்டி(70). விவசாயியான இவர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும், இவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் உயிரிழப்பு: பெரம்பலுார் மாவட்டம் பில்லங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(55). இவரது மனைவி மணிமேகலை(50). இவர்களது மகன் வினோத்குமார்(29). இவர்கள் 3 பேருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதியானதால், சேலம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு வினோத்குமார், முருகேசன் ஆகிய இருவருக்கும் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி வினோத்குமார் உயிரிழந்தார். இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x