Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

ஊரடங்கு விதிகளை மீறியதால் - பறிமுதலான வாகனங்களை திருப்பி ஒப்படைக்கும் பணி :

திருச்சி மாநகரில் ஊரடங்கு விதிகளை அமல்படுத்துவதற்காக கடந்த மே 15-ம் தேதி முதல் போலீஸார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வந்தனர்.

அதன்படி, ஊரடங்கு விதிகளை மீறியதாக 6,610 இருசக்கர வாகனங்கள், 188 மூன்று சக்கர வாகனங்கள், 73 நான்கு சக்கர வாகனங்கள் என 6,871 வாகனங்களை பறிமுதல் செய்து திருச்சி கே.கே.நகரிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பறிமுதல் செய்த வாகனங்களை தேதி முன்னுரிமை அடிப்படையில் போலீஸார் உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கத் தொடங்கியுள்ளனர்.

முதல்நாளான நேற்று 236 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, ஒரு கார் என 238 வாகனங்கள் உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள வாகனங்கள் தினமும் 250 வீதம் உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x