Last Updated : 08 Jun, 2021 03:14 AM

 

Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

கல்லணைக் கால்வாயின் வியக்க வைக்கும் கட்டுமானம் - 87 ஆண்டுகளுக்கு பிறகு நவீன தொழில்நுட்பத்தில் சீரமைக்கப்படும் ‘கீழ்குமிழி' :

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மேல்பகுதியில் காட்டாறும், அதன் கீழே பாசன ஆறும் செல்லும் வகையில் கட்டப்பட்ட வியக்க வைக் கும் கட்டுமானமான கல்லணைக் கால்வாயில் உள்ள ‘கீழ்குமிழி’ தற்போது பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பத்துடன் சீரமைக்கப்பட்டு வருகிறது.

1928-ம் ஆண்டு முதல் 1934-ம் ஆண்டு வரை தஞ்சாவூர், புதுக் கோட்டை மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் கல்லணைக் கால்வாய் என்றழைக்கப்படும் புது ஆறு வெட்டப்பட்டது.

இந்த பாசன ஆறு வெட்டப்படும் போது, மழைக் காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் செல்லும் வகையில் வடிகால்களும் முறையாக அமைக்கப்பட்டன. அதன்படி, காட்டாறும், பாசன ஆறும் கலக்காத வகையில் கல்லணைக் கால்வாயின் குறுக்கே 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ‘சைப்பன்கள்' அமைக்கப்பட்டன. இதில் பாசன ஆறு மேல்பகுதியிலும், காட்டாறு வாய்க்கால்கள் அதன் அடிபகுதியிலும் செல்லும்.

அதேபோல, காட்டாறு மேல் பகுதியிலும், பாசன ஆறு அதன் கீழ் பகுதியிலும் செல்லும் வகையில் அடப்பன்பள்ளம், கண்டிதம்பட்டு, ஈச்சன்விடுதி உள்ளிட்ட 4 இடங் களில் கட்டுமானம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த கட்டமைப்பை ஆங்கிலேயர்கள் ‘கீழ்குமிழி' என அழைத்து அதை ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர்.

இதில் பிரதானமானது தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டில் உள்ள கீழ்குமிழி. இங்கு மேல்பகுதியில் வல்லம் வாரி எனப்படும் காட்டாறு செல்கிறது. வல்லம் பகுதியில் பெய்யும் மழைநீர் மழைக் காலங்களில் பெருக்கெடுத்து இதன் வழியாக 29 கிலோ மீட்டர் தொலை வுக்கு பயணித்து வடுவூர் அருகே கண்ணனாற்றில் கலக்கிறது.

கல்லணைக் கால்வாய் ஆற் றில் உள்ள இந்த கீழ்குமிழி உள்ள இடத்தில் 8 கண்மாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரம் கனஅடி நீர் வந்தாலும் அப் படியே உள்வாங்கி, 100 அடி தொலைவுக்கு உள்பகுதியில் பாய்ந்து பின்னர் வெளியேறும் வகையில் இந்த கட்டுமானம் செங்கல் - சுண்ணாம்பு கலவைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த வியக்க வைக்கும் கட்டுமா னத்தை பொதுப்பணித் துறை பொறியாளர்கள் தற்போதும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

பழமை மாறாமல் புதுப்பிப்பு

இந்நிலையில், 148 கிலோ மீட்டர் தொலைவுள்ள கல்லணைக் கால்வாய் ஆற்றில் அதன் முழு கொள்ளளவான 4,700 கனஅடி நீர் செல்லும் வகையில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.2,639.15 கோடியில் 16 தொகுப்புகளாக முழுமையாக சீரமைக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக கண்டிதம் பட்டு கீழ்குமிழியும் சீரமைக்கப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள் ளன. இதில் கட்டுமானம் அப் படியே பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பத்துடன் வலுப்படுத் தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லணைக் கால்வாய் உதவி செயற்பொறியா ளர் சண்முகவேல் கூறியது: ஆங்கி லேயர்களின் ஆட்சிக்காலத்தில் பொறியாளர் எல்லீஸ் என்பவரால் கொண்டு வரப்பட்ட அற்புதமான பாசனத் திட்டம் கல்லணைக் கால்வாய். இதில் கண்டிதம்பட்டு கீழ்குமிழியின் மேல்பகுதியில் வல்லம் வாரி காட்டாற்றின் நீர் எவ்வித இடையூறும் இல்லாமல் ஓடும். பாசன நீர் கல்லணைக் கால்வாயில் ஓடும். இதுவரை அந்த இடத்தில் ஒரு கசிவு கூட ஏற்பட்டதில்லை.

தற்போது கல்லணைக் கால்வாய் முழுவதுமாக சீரமைக்கப்படு வதால், இந்த கீழ்குமிழியும் வலுப்படுத்தப்படுகிறது. 87 ஆண்டு கள் கழித்து, தற்போது தான் கீழ்குமிழி சீரமைக்கப்படுகிறது. 80 சதவீத பணிகள் கீழ்குமிழியில் நிறைவு பெற்றுள்ளன. கீழ்குமிழி யில் சிக்கிய குப்பை கழிவுகள் மட்டும் 20 டன் அளவுக்கு அகற்றப் பட்டுள்ளன. பழமை மாறாமல் கீழ்குமிழியை முழுமையாக சீரமைத்துள்ளோம். தொடர்ந்து, எஞ்சியுள்ள கீழ்குமிழிகளும் பழமை மாறாமல் வலுப்படுத்தப்பட உள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x