Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

சிவப்பு நிற ரேஷன் கார்டு கோரி புதுவை முதல்வருக்கு கடிதம் :

காரைக்கால்: சிவப்பு நிற ரேஷன் கார்டு வழங்கக் கோரி, காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், காரைக்கால் மாவட்டச் செயலாளர் ப.மதியழகன் கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு, அரசு நிர்வாக குளறுபடிகளால் சிவப்பு நிற ரேஷன் கார்டுக்கு பதிலாக மஞ்சள் நிற ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதனால், மஞ்சள் நிற கார்டு பெற்றவர்கள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், சலுகைகள், நிவாரணம் உள்ளிட்டவற்றை பெற முடியவில்லை.

எனவே, இதுகுறித்து புதுச்சேரி அரசு கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோரை கண்டறிந்து, அவர் களுக்கு சிவப்பு நிற ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, புதுச்சேரி முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், காரைக்கால் தலைமை அஞ்சலகத்திலிருந்து கடிதங்கள் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது என தெரிவித்தார்.

இதில், கட்சி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஜி.கலியமூர்த்தி. ஜி.கே.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x