Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா பெருந்தொற்று தமிழகத்தில் அதிகமாக பரவி வருவதைத் தொடர்ந்து, வரும் 14-ம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர தேவைகளுக்காக பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்றவர்களிடம் மாதாந்திர தவணை தொகை மற்றும் அதற்குரிய வட்டி தொகையினை உடனடியாக திரும்ப செலுத்த கோரி சம்பந்தப்பட்ட நிதி நிறுவன பிரதிநிதிகள் வற்புறுத்தி வருவதுடன், மகளிரை பல்வேறு வழிகளில் மிரட்டி வருவதாகவும் புகார்கள் வரப்பெற்றுள்ளன.
ஊரடங்கு அமலில் உள்ள இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதார பாதிப்பினை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் கடனுக்கான தவணைத் தொகையினை பெறுவதில் கடின போக்கை தவிர்க்க வேண்டும். இது தொடர்பான புகார்கள் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT