Published : 08 Jun 2021 03:15 AM
Last Updated : 08 Jun 2021 03:15 AM

ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது :

கோவில்பட்டி

விளாத்திகுளம் அருகேஆற்றங்கரை கிராமத்தில்ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல்கிடைத்தது. விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் அந்த கிராமத்துக்கு சென்றனர். அங்கு கடத்துவதற்காக 3 பேர் ரேஷன் அரிசியை சேகரித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்ததில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்தமுனியசாமி (66), சண்முகம்(51), மதுரை கருப்பாயூரணிசீமா நகரைச் சேர்ந்த கதிர்வேல்(33)என்பதும், ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும்தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 40 மூட்டைகளில் இருந்த 1.6 டன் ரேஷன் அரிசி, சுமை ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x