Published : 08 Jun 2021 03:15 AM
Last Updated : 08 Jun 2021 03:15 AM

வனத்துறையிடம் ஆந்தை ஒப்படைப்பு :

திருவண்ணாமலை: ஆரணி அருகே விவசாய நிலத்தில் இருந்த அறிய வகை ஆந்தையை மீட்டு வனத்துறையிடம் விவசாயி ஒப்படைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்புலி ஊராட்சி வேப்பங்கொட்டை கிராமத்தில் வசிப்பவர் விவசாயி சிவலிங்கம். இவர், நேற்று தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு அறிய வகை ஆந்தை இருப்பதை பார்த்து பாதுகாத்துள்ளார். இது குறித்து சந்தவாசல் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினரிடம் ஆந்தையை சிவலிங்கம் ஒப்படைத்தார். பறக்கக்கூடிய சூழ்நிலையில் ஆந்தை இல்லாததால் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு பறக்கவிடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x