Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM

கால் இறுதி சுற்றில் போபண்ணா ஜோடி :

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, குரோஷியாவின் பிராங்கோ ஸ்குகோர் ஜோடி கால் இறுதிச் சுறுக்கு முன்னேறியது.

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு 4-வது சுற்றில் ரோகன் போபண்ணா, பிராங்கோ ஸ்குகோர் ஜோடி எல் சவேடாரின் மார்செலோ அர்வாலோ, நெதர்லாந்தின் மேட்வே மிடெல்கூப் ஜோடியை எதிர்த்து விளையாடுவதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக மார்செலோ அர்வாலோ ஜோடி போட்டியில் இருந்து விலகியது. இதனால் ரோகன் போபண்ணா ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

கால் இறுதிச் சுற்றில் ரோகன்போபண்ணா ஜோடி ஸ்பெயினின் பப்லோ அன்டுஜர், பெட்ரோ மார்ட்டின்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது. மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 15-ம் நிலைவீராங்கனையான பெலாரசின் விக்டோரியா அசரங்கா 7-5, 3-6,2-6 என்ற செட் கணக்கில்31-ம் நிலை வீராங்கனையானரஷ்யாவின் பாவ்லிசென்கோவ விடம் தோல்வியடைந்தார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் 8-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-6(5), 6-7(3), 7-6(4), 7-5 என்ற செட் கணக்கில் 3 மணி நேரம் 35 நிமிடங்கள் போராடி 59-ம் நிலை வீரரான ஜெர்மனியின் டொமினிக் கோபெரரை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்தார். இந்த ஆட்டம் நள்ளிரவு 12.45 மணி அளவில் தான் முடிவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x