Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

சாலை விபத்தின்போது - மார்பில் கடப்பாரை பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு :

பாலக்கோடு அருகே இரு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தின்போது, மார்பில் கடப்பாரை பாய்ந்து சிறுவன் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக் கோடு வட்டம் அமானிமல்லாபுரம் அடுத்த தோட்டப்பாவளி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (17). இவர் நேற்று முன்தினம் இரவு தனது உறவினரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அமானிமல்லாபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.அப்போது, எதிரில் அமானிமல்லாபுரத்தைச் சேர்ந்த மர வியாபாரி குண்டன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மரம் வெட்டும் தொழிலாளி பெருமாள் என்பவரை ஏற்றிக் கொண்டு தோட்டப்பாவளி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பெருமாள் கடப்பாரையை கையில் வைத்திருந்தார்.அப்போது, எதிரும், புதிருமாக வந்த இருசக்கர வாகனங்கள் இரண்டும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இதில், பெருமாள் வைத்திருந்த கடப்பாரை வீரபத்திரனின் மார்பில் பாய்ந்ததில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்த வர்கள் அவர்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக மாரண்ட அள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x