Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகேயுள்ள அலமாதி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் லோகநாதன்(34). இவர், கடந்த 4-ம் தேதி மாலை அலமாதி பகுதியில் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள பனை மரத்தில் ஏறி, நுங்கு பறிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக, பனை மரத்திலிருந்து தவறி விழுந்த லோகநாதன், பலத்த காயங்களுடன் சென்னைமணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லோகநாதன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். விபத்து குறித்து சோழவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்துவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT