Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

புதுச்சேரியில் - புதிதாக 640 பேருக்கு கரோனா தொற்று : மேலும் 15 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிதாக 640 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 2 பேர் உட்பட 15 பேர் உயிரிழந் துள்ளனர். அதே நேரத்தில் 1,138பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 9,215பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி யில் 470, காரைக்காலில் 136, ஏனாமில் 15, மாஹேவில் 19 என மொத்தம் 640 (6.95 சதவீதம்) பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 8, காரைக்காலில் 5, மாஹேவில் 2 என 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனாமில் புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இவர்களில் 6 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள். இதில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 2 பேர் அடங்குவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,628 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 ஆகவும் உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 9 ஆயிரத்து 79 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 1,236 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 7 ஆயிரத்து 34 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 8 ஆயிரத்து 270 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 1,138 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 181 (90.93 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 11 லட்சத்து 3 ஆயிரத்து 837 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 9 லட்சத்து 51 ஆயிரத்து 695 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 729 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x