Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM
விருத்தாசலம் அருகே மீன்பிடி திருவிழாவை ஒட்டி ஏரியில் மீன் பிடித்தவர்களை போலீஸார் விரட்டியடித்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மன்னம்பாடி கிராமத்தில் ஆண்டும் தோறும் மீன்பிடி திருவிழா நடைபெறும். இதில் மன்னம்பாடி, இடையூர், படுக்கலாநத்தம், விளாங்காட்டூர் உள்ளிட்ட 10 கிராம மக்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் மீன் பிடிப்பது வழக்கம்.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அதை மீறி 10 கிராம மக்கள் நேற்று மன்னம்பாடி ஏரியில் மீன்பிடித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீஸார் மன்னம்பாடி ஏரிக்குச் சென்றனர். அப்போது மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் போலீஸார் வாகனத்தைக் கண்டதும் அங்கிருந்து வெளியேறி தங்கள் ஊருக்குள் சென்றனர்.
பின்னர் போலீஸார் அவர்களை எச்சரித்து விட்டுத் திரும்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT