Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM
அமெரிக்காவின் சியாட்டில் தமிழ்ச் சங்கம் சார்பில் மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையின் கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங் கப்பட்டன. அந்த சங்கத்தின் சார்பில் சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் உபகரணங்களை வழங்கினார். அதை தோப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காந்திமதிநாதன் உள்ளிட்ட மருத்துவர்கள் பெற்றுக் கொண்டனர்.
உயிர் காக்கும் மருந்துகளை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான குளிர்சாதனப் பெட்டிகள், பிரிண்டர் உட்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான உபகரணங் கள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT