Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

மத்திய அரசிடம் இருந்து - கூடுதலாக தடுப்பூசிகள் பெற நடவடிக்கை : அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக தடுப்பூசிகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை பிரிவையும், தோப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை பிரிவையும் அமைச்சர் பி.மூர்த்தி நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,500-ல் இருந்து 420 ஆகக் குறைந்துள்ளது. கிராமங்களிலும் கரோனா சிகிச்சை சிறப்பு மையங்கள் புதிதாக ஏற் படுத்தப்பட்டுள்ளன.

இதுபோன்ற முன்னெச் சரிக்கைகளை முதல்வர் தொடர்ந்து மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் கரோனா மூன்றாவது அலை வந்தாலும், அதில் இருந்து தொற்று பரவலை எளிதில் கட்டுப் படுத்தலாம்.

முன்களப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிற்சாலைகளில் பணி புரிவோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக தடுப்பூசி பெற நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சிகளில் ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் விசாகன், எம்எல்ஏக்கள் வெங் கடேசன், பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x