Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

வலையங்குளத்தில் வீட்டுக்குள் புகும் மழைநீரால் மக்கள் அவதி :

வலையங்குளம் காலனியில் தேங்கி நின்ற மழைநீரை அகற்ற முயற்சித்த அப்பகுதி மக்கள்.

மதுரை

திருப்பரங்குன்றம் ஒன்றியம், வலையங்குளம் ஆதிதிராவிடர் காலனியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்ந்தும், சில இடங்களில் அடைபட்டும் கிடக்கின்றன. வாய்க்கால் செல்லும் பாதையை ஒட்டி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் வாய்க் கால் பள்ளமாகி உள்ளது.

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழையால் தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் வீட்டுக்குள் புகுந்த நீரை வெளியேற்ற சிரமப்படுகின்றனர். எனவே, நிரந்தரத் தீர்வாக வாய்க்கால்கள் அமைத்து மழை நீரைக் கடத்துவதற்கு வழி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x