Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM
ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் கரோனா தொற்று தடுக்கும் விதமாக கபசுரக் குடிநீர், கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மதிமுக சார்பில் நேற்று வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலர் வைகோவின் மகன் துரை 50-க்கும் மேற்பட்டோருக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிப் பேசுகையில், பொதுமக்கள் தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். இதில் சாத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் ரகுராமன், மதிமுக மாவட்டப் பொருளாளர் விநாயகமூர்த்தி, ராஜபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT