Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM

சென்னிமலையில் 6,000 பேர்தனிமைப்படுத்தி கண்காணிப்பு :

ஈரோடு: சென்னிமலையில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், 13 பாதைகள் அடைக்கப்பட்டு, 6000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஒரே நாளில் 50 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 1010 நெசவாளர் காலனி, பாலப்பாளையம் மற்றும் குமாரபுரி ஆகிய 3 குடியிருப்புப் பகுதிகளும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள 13 வழிகளும் அடைக்கப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்கள் பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதியில் வெளி நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வசிப்போரில் கரோனா அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x