Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 560 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநில தென் பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில்கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதையடுத்து, தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த 4-ம் தேதி விநாடிக்கு 240 கனஅடியும், நேற்று முன்தினம் 400 கனஅடி என படிப்படியாக நீர்வரத்து அதிகரித்த நிலையில், நேற்று நீர்வரத்து 560 கனஅடியாக மேலும் அதிகரித்தது.
இதனிடையில், நீர்வரத்து முழுவதும் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது. அணை யின் மொத்த கொள்ளள வான 44.28 அடியில் தற்போது, 40.34 அடியாக நீர்மட்டம் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT