Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் மாநில திட்டக் குழு, கடந்த 2020-ல் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இது இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.
அந்த அமைப்பில் மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன், மறைந்த நெல் ஜெயராமனுடன் பாரம்பரிய நெல் ரகங்களைப் பரவலாக்க உறுதுணையாக இருந்து பணியாற்றிய மண்புழு விஞ்ஞானி சுல்தான் அஹமது இஸ்மாயில், சித்த மருத்துவர் கு.சிவராமன் போன்றோர் நியமிக்கப்பட்டிருப்பதில் இருந்து, இயற்கை சார்ந்த விஷயங்களை முன்னெடுத்து, செயல்படுத்துவதில் தமிழக அரசு எத்தகைய கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை உணர முடிகிறது. இத்தகைய குழுவை நியமித்த தமிழக முதல்வருக்கு நன்றியையும், குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT