Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM
நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் பதினெட்டாம்படியான்(41). கீழ்வேளூர் கீழகாவாலகுடி பகுதியைச் சேர்ந்தவர் தவமணி(51). இவர்கள் இருவர் மீதும் சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக, நாகை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து, எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனா பரிந்துரையின்பேரில், பதினெட்டாம்படியான், தவமணி ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் பிரவீன் பி.நாயர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். தொடர்ந்து, இரு வரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT