Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM

தானியங்கள் இருப்பை இணையத்தில் பதிவேற்ற மொத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் :

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மொத்த வியாபாரிகள் தங்களிடம் உள்ள தானியங்கள் இருப்பை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை துணை இயக்குநர் எஸ்.சுபாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: மளிகைப் பொருள் மொத்த விற்பனையாளர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள தானியங்களின் கையிருப்பை மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள http//fcainfoweb.nic.in/psp என்ற இணையதள முகவரியில், தங்களுக்கென ஒரு பயனர் அடையாளம்(user id), கடவுச்சொல்(password) ஆகியவற்றை உருவாக்கி, வாரம் ஒரு முறை பதிவேற்றம் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மளிகைப் பொருட்கள் மொத்த வியாபாரிகள் அனைவரும், தங்களிடம் உள்ள தானியங்களின் கையிருப்பை பதிவேற்றம் செய்யுமாறும், தொடர்ந்து வாரம் ஒரு முறை அத்தகவல்களை புதுப்பிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1995-ன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x